Sunday, 28 June 2020

தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம்

மாவீரர்  ஈழத்துக்காக 
மாவீரர் தம் உயிர் தந்தார் 
மாவீரர் தமிழீழம் வாழ
தம் இனம் வாழ பினமாகினர் 

அவர் நினைவு அது 
நம் இன நிமிர்வு
களம் கண்ட அவர் 
சிரம் சாயவில்லை 
அவர் உடல் மட்டும் 
மண்ணுக்கு தமிழீழ உரமானது

அவர் தந்த கொடி
இது அவர் உயிர் 
தந்து பறந்த கொடி
இது தமிழ் மானம்
காத்த கொடி 

அவர் நினைவு உரமாக்கி
புலிக்கொடி நாட்டி 
தமிழீழம் என்னும்
விருச்சம் வளர்ப்போம்

சரவணை மைந்தன்

மேலே இருக்கும் படம் பார்த்தவுடன் என் மனதில் தோன்றிய என்னங்கள் 12 நிமிடத்தில் வடித்த கவிதை 

Thursday, 14 May 2015

கவிதை இல்லை

கவிதை எழுதலாம் 
நிலமை இல்லை......
காலம் வரும் 
அதையும் காணவில்லை....

நிம்மதி என்பது
எனக்கில்லை..
நின்று பார்த்தேன்...
இருந்து பார்த்தேன்...
படுத்தும் பார்த்தேன்...

ஓடினேன் ஓயவில்லை
பாடினேன் பாடல் இல்லை.
கைகள் மட்டும் எழுதவில்லை 
கால்களில் நடுக்கம்.... 
அதுவும் குறையவில்லை. 

என்னவென்று தெரியா
இருள் எனக்கு புதிதா?
தமிழ் அதுகூட மறந்தேன்.

என்னவென்று சொல்ல 
என் நிலை...
மண்ணில் நிலை 
ஒன்றுமில்லை 
..........அது 
மட்டும் நிலை என்பதே
என் திடம்

சரவணை மைந்தன்


Monday, 2 March 2015

விளங்குதா? இக்கவிதை

எப்படி வந்தது -இந்த
பாசம்
எதனால் அடைந்தேன்-இந்த
நேசம்
இனத்தோடு வந்த 
பந்தம்
இரவோடு கரைந்திடுமா?
இலங்கியங்கள் கூறவில்லை 
இதுவரை பார்க்கவில்லை 

எரிந்திடும் இந்த உடல்
புதைந்திடும் செத்த சடம்
இருப்பதோ ஒற்றை அன்பு
உணர்ந்திடும் உள்ளம்
அதை பற்றிட மறுப்பதேன்?

கேள்விகள் வந்தாலும் 
கவிதைகள் வரைந்தாலும்
கல்விகள் இருந்தும் -பல
கதைகள் அறிந்தும்
மனங்கள் மட்டும்
மாறதோ என் மனிதா?

Friday, 30 January 2015

விடுதலைக்கு விடு...தலை

எத்தனை ஆயிரம்.
எவ்வளவு  காலம்.....
விடுதலை வேண்டிய
எம் பயணம். 

கொட்டும் மழை
சுட்டெரிக்கும் வெயில்!
காட்டிலே கருநாகங்கங்கள்
பதுங்கு குழியிலே வெள்ளம்!
வெளியிலோ பணி.....

காவலுக்கு நின்றோம்
கண்ணயர்ந்தது இல்லை.....
கண்ணிவெடி காலிலே-காத்திருக்க
காவல்காத்தோம்! 

எப்போ வரும் 
எப்படி வரும் 
எதுவும் தெரியா!
சீறிவந்து சிவப்பை தரும்
உயிர் கூட போகும்.. 

இத்தனையும்
எதற்காக ?
விடுதலை எம் தமிழ்
விடுதலை -விடுதலைக்கு 
விடு....தலை.

இன்னல்களை பல 
இன்றும் தொடருது.
இல்லை விடுதலை
இன்றும் வா - விடு 
உன் தலை !
விடுதலை விடுதலை..

சரவணை மைந்தன் 


Thursday, 29 January 2015

முட்டை பொரியலும் பிட்டுக்கும் மஞ்சள் புரியாணி ஈடாகுமா


பிறந்ததும் ஏழைக்குடிசை
தவழ்ந்ததும் மண் தரையில்
இருந்தும் ஏழ்மை தெரியவில்லை 
அன்னை உன்மடி கிடைக்கையில்

இருப்பதும் சுற்றும் நாற்காலி 
கிடப்பதோ பஞ்சு மெத்தை 
இருந்தும் ஏழ்மை தெரிகிறதே 
அன்னை நீ இல்லாமையால்

கல்லில் அடித்து
பனங்கழியில் துவைத்து
வேலியில் உலர வைத்து
அணிந்தேன் ஆடையை

எத்தனை இயந்திரங்கள் 
அத்தனையும் இயக்கி 
ஆடையை அழுத்தி 
உடனே அணிந்தும்
அந்த சுகம்
அன்னையே கிடைக்கவில்லை

பிஸ்சா என்ன
பர்கர் சொல்லி
சோஸ் விட்டு  தந்தாலும்
அம்மியில் அரைத்து 
ஊறப்போட்ட தோசைக்கு
ஈடாகுமா?

முட்டை பொரியலும்
பிட்டுக்கும் 
மஞ்சள் புரியாணி
ஈடாகுமா?




Thursday, 8 January 2015

முத்துக்குமரா பார் நீ பாரில் தமிழீழ விடுதலை

முத்துக்குமரா...
எங்களுக்காக உன்னுடல்
வெந்தாய்.
விடுதலைக்காய் வித்தானய்.
வெந்தணல் மீது உன்னுடல்.
முத்தே.....
உன் நினைவு எம்மை 
வாட்டுதய்யா!
விடுதலை வித்தே-நீ
ஈழ மக்களின் சொத்தே!

உன் உறவுகள் நாம்.
எம் இனமடா  நீ -நீ
தீ வைத்தது உனக்கல்ல...
பேரினவாத பேரரசுகளுக்கு வைத்தாய்.

ஈகை போராளியே...
உன் ஈகம் தமிழருக்கு
விடுதலை தீயை விதைக்குதடா-பார்
பரவியது தீ பாரெங்கும்...

விடுதலை பெறும் வரை
உன் தீ அடங்குமாய்யா?
எம் மனங்களில் அது விலகுமாய்யா!


பார் நீ பாரில் தமிழீழ விடுதலை... 
வா நீ வந்து பார்..
அதுவரை நாம் ஓயோம்


சரவணை மைந்தன்

Monday, 8 December 2014

அவர் எழுவார் விருச்சமாக

விளைந்த பயிர் 
அறுவடையாகும்
மீண்டும் அந்த விதை 
பயிராகும்

விடுதலை வீர்ர்கள்
வீழ்ந்தனர் வித்தாக
அவர் எழுவார் 
விருச்சமாக
நிச்சயம் இது நடக்கும்

கடல் தன்னில் மழை
கடலை நனைக்காது
எம் மண்ணில் குண்டுகள் 
எம் மனதை வதைக்காது

வரும் பகை விரட்ட
கல்லறைகள் கருவறை
தன்னில் பதுப்பிறப்பெடுக்கும்

கடல் அலைகள் 
பொங்கி எழும் 
காடுகள் உயிர் பெறும்

உடைந்த கல்லறை 
எழுந்து இருக்கும் 
எதிரி பயந்து ஓடுவான்
தமிழீழம் உயிர் பெறும் 
எங்கள் மாவீரர்
கனவுகள். நனவாகும்


சரவணை மைந்தன்