Sunday, 6 April 2014

பிணங்களாயும் எம்மை விடவில்லையே விடுதலை இன்னும் வரவில்லையே


மலேசியன் விமானத்தின் கறுப்பு  பெட்டி கண்டிபிடிக்கப்படது 
மாண்ட எங்கள் மக்களின் கருகிய
உடல்கள் இன்னும் காணவில்லையே?
முள்ளிவாய்க்கள் முற்றத்தில்
கருகிய எங்கள் உறவுகளை 
காணவில்லையே கண்டுபிடிக்க யாரும் இல்லையா?
கண்கள் வழியும் நீரும்  கடலாகியதே !
அதில் முழ்கிய விமானம் கண்டுபிடித்துள்ளது .
எங்கள்  கண்ணீர் இன்னும் குறையவில்லையே 

குண்டு போட்டு கொண்டு விட்டார்கள் !
நீதி கிடைக்கவில்லையே !
பிணங்களாயும் எம்மை விடவில்லையே
விடுதலை இன்னும் வரவில்லையே
வீட்டினுள் நாங்கள் உறங்கமுடியவில்லையே

உலகினுள் நீதி தமிழனுக்கு இல்லையா?
அவன் பெறுவான் நீதி .
அவன் எடுப்பான் எவன் கெடுப்பான் .
தலைமை தர்மம் காக்கும்



சரவணை மைந்தன் 

No comments:

Post a Comment