Thursday, 14 May 2015

கவிதை இல்லை

கவிதை எழுதலாம் 
நிலமை இல்லை......
காலம் வரும் 
அதையும் காணவில்லை....

நிம்மதி என்பது
எனக்கில்லை..
நின்று பார்த்தேன்...
இருந்து பார்த்தேன்...
படுத்தும் பார்த்தேன்...

ஓடினேன் ஓயவில்லை
பாடினேன் பாடல் இல்லை.
கைகள் மட்டும் எழுதவில்லை 
கால்களில் நடுக்கம்.... 
அதுவும் குறையவில்லை. 

என்னவென்று தெரியா
இருள் எனக்கு புதிதா?
தமிழ் அதுகூட மறந்தேன்.

என்னவென்று சொல்ல 
என் நிலை...
மண்ணில் நிலை 
ஒன்றுமில்லை 
..........அது 
மட்டும் நிலை என்பதே
என் திடம்

சரவணை மைந்தன்


No comments:

Post a Comment