பிறந்ததும் ஏழைக்குடிசை
தவழ்ந்ததும் மண் தரையில்
இருந்தும் ஏழ்மை தெரியவில்லை
அன்னை உன்மடி கிடைக்கையில்
இருப்பதும் சுற்றும் நாற்காலி
கிடப்பதோ பஞ்சு மெத்தை
இருந்தும் ஏழ்மை தெரிகிறதே
அன்னை நீ இல்லாமையால்
கல்லில் அடித்து
பனங்கழியில் துவைத்து
வேலியில் உலர வைத்து
அணிந்தேன் ஆடையை
எத்தனை இயந்திரங்கள்
அத்தனையும் இயக்கி
ஆடையை அழுத்தி
உடனே அணிந்தும்
அந்த சுகம்
அன்னையே கிடைக்கவில்லை
பிஸ்சா என்ன
பர்கர் சொல்லி
சோஸ் விட்டு தந்தாலும்
அம்மியில் அரைத்து
ஊறப்போட்ட தோசைக்கு
ஈடாகுமா?
முட்டை பொரியலும்
பிட்டுக்கும்
மஞ்சள் புரியாணி
ஈடாகுமா?
No comments:
Post a Comment