முத்துக்குமரா...
எங்களுக்காக உன்னுடல்
வெந்தாய்.
விடுதலைக்காய் வித்தானய்.
வெந்தணல் மீது உன்னுடல்.
முத்தே.....
உன் நினைவு எம்மை
வாட்டுதய்யா!
விடுதலை வித்தே-நீ
ஈழ மக்களின் சொத்தே!
உன் உறவுகள் நாம்.
எம் இனமடா நீ -நீ
தீ வைத்தது உனக்கல்ல...
பேரினவாத பேரரசுகளுக்கு வைத்தாய்.
ஈகை போராளியே...
உன் ஈகம் தமிழருக்கு
விடுதலை தீயை விதைக்குதடா-பார்
பரவியது தீ பாரெங்கும்...
விடுதலை பெறும் வரை
உன் தீ அடங்குமாய்யா?
எம் மனங்களில் அது விலகுமாய்யா!
பார் நீ பாரில் தமிழீழ விடுதலை...
வா நீ வந்து பார்..
அதுவரை நாம் ஓயோம்
சரவணை மைந்தன்

Ivarukku enathu veera vannakkam
ReplyDelete