Monday, 8 December 2014

அவர் எழுவார் விருச்சமாக

விளைந்த பயிர் 
அறுவடையாகும்
மீண்டும் அந்த விதை 
பயிராகும்

விடுதலை வீர்ர்கள்
வீழ்ந்தனர் வித்தாக
அவர் எழுவார் 
விருச்சமாக
நிச்சயம் இது நடக்கும்

கடல் தன்னில் மழை
கடலை நனைக்காது
எம் மண்ணில் குண்டுகள் 
எம் மனதை வதைக்காது

வரும் பகை விரட்ட
கல்லறைகள் கருவறை
தன்னில் பதுப்பிறப்பெடுக்கும்

கடல் அலைகள் 
பொங்கி எழும் 
காடுகள் உயிர் பெறும்

உடைந்த கல்லறை 
எழுந்து இருக்கும் 
எதிரி பயந்து ஓடுவான்
தமிழீழம் உயிர் பெறும் 
எங்கள் மாவீரர்
கனவுகள். நனவாகும்


சரவணை மைந்தன்

1 comment: