Thursday, 23 October 2014

தமிழ் தாயின் நிலைமை

இதுதான் தமிழ் தாயின் நிலைமை உண்மையை போட்டு உடைக்கிறார் உலகம் கேட்குமா? வன்னியில் நிலமை விளங்குமா?

பத்துமாதம் வரமிருந்து பெற்ற
என் பிள்ளை

பல்லாக்கில் காவி பல்கலையும் கற்க
பல ஆண்டுகள் தவமிருந்த பிள்ளை

உன்னை பாடையில் ஏற்ற கூட
நீ இன்று எங்கே தெரியவில்லை
ஐயா

பரிதவிக்கும் மனம்
பாரினில் கேட்கவில்லை
ஐயா

கயவர் கூட்டம் காட்டி கொடுக்கும் கூட்டம் இவர்கள் இன்று வாழ-நீ
எங்கே மகனே

பலி எடுக்கும் கூட்டம்
பாடையில் போகும் நாள்
மகனே

வரும் என்று நினைத்து
வைகறை பார்க்கிறேன்

ஐநா சபைக்கும் அனுமதி இல்லை
தட்டிக்கேட்க யாரும் இல்லை

தமிழனுக்கு உதவி தமிழனே
தமிழ்நாடே கேள் எம் தமிழ் அன்னையின்
நிலையை


சரவணை மைந்தன்

No comments:

Post a Comment